×

என்எல்சி தொழிற்சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நெய்வேலி, மார்ச் 8: என்எல்சியில் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி தொழிற்சங்கத்தினர்  கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெய்வேலியில் என்எல்சி ஊழியர்களின் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் இதுவரை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொமுச மற்றும் சிஐடியு சார்பில் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த கோரி மத்திய அரசு மற்றும் என்எல்சி நிறுவனத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெய்வேலி மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சிஐடியு தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். தொமுச தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுகுமார், சிஐடியு பொதுச்செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொமுச பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி மற்றும் துணை தலைவர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 12ம் தேதி நெய்வேலியில்
உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags : NLC ,trade unions ,demonstration ,
× RELATED விபத்தில் என்எல்சி தனி அலுவலர் இறப்பு;...