×

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மணல் திருடிய 10 பேர் கைது

ஊத்துக்கோட்டை, மார்ச் 8: பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மணல் திருடிய 10 பேரை போலீசார் கைது செய்து மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
பெரியபாளையம் அருகே ஆவாஜிபேட்டை கிராமம் வழியாக செல்லும் ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டு வண்டி மூலம் மணல் திருடப்படுவதாக மாவட்ட எஸ்பி பொன்னிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன், பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மதியரசன், வெங்கல் எஸ்ஐ சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஆரணி ஆற்றில் மப்டி உடையில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆரணி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 10 மாட்டு வண்டிகளை போலீசார் பிடித்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மாட்டு வண்டிகளுடன் பெரியபாளையம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : river ,Periyapalayam ,Arany ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை