×

ராசிபுரம் அருகே மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள்

நாமக்கல், மார்ச் 7: ராசிபுரம் அருகே பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டியை கொலை செய்த டிரைவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அத்தனூரை சேர்ந்தவர் பாப்பம்மாள்(65). இவரது கணவர் வெங்கடாசலம் இறந்துவிட்டார். இதனால், பாப்பம்மாள் தனியாக வசித்து வந்தார். கடந்த 2016 செப்டம்பர் 21ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த பாப்பம்மாளை, அத்தனூர் பாரதி நகரை சேர்ந்த கோழிப்பண்ணை தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி(39), லாரி டிரைவர் வடிவேல்(39) ஆகிய இருவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்தனர். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது,  நாமக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த கிருஷ்ணமூர்த்தி, வடிவேல் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹6 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Tags : elder ,Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்