×

நாமகிரிப்பேட்டை அண்ணமார் சாமி கோயிலில் விளக்கு பூஜை

நாமகிரிப்பேட்டை, மார்ச் 6: நாமகிரிப்பேட்டை அடுத்த காக்காவேரி செல்லாண்டியம்மன், அண்ணமார் சாமி கோயிலில் விளக்கு பூஜை நடந்தது.  இதனையொட்டி, மோகனூர் ஆற்றில் இருந்து தீர்த்தக்கூடம் எடுத்து வரப்பட்டு, கணபதி ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஈஸ்வரன் கோயிலில் இருந்து மாரியம்மன் கோயில் வரை உள்ள சுவாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. செல்லாண்டியம்மன், அண்ணாமார் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. இதையடுத்து, குத்து விளக்கு பூஜையும், மொச்சைக் கொட்டை பூஜையும் நடந்தது. மழைவேண்டி குன்றுடையான் கதை கூறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை காக்காவேரி அண்ணமார் சாமி விளையன் குலகொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

Tags : Namakkirpet ,Anna Brothers Sami Temple ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்