×

சேந்தமங்கலத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹1 கோடி வங்கி கடன் உதவி

சேந்தமங்கலம், மார்ச் 7: சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், டாப்செட்கோ மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வங்கித் தலைவர் பழனிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்துகொண்டு, 209 மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு ₹1 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் எட்டிக்கன், உறுப்பினர்கள் பெரியசாமி, அண்ணாதுரை, பழனிமுத்து, தண்டபாணி, கணேசன், செல்வம், பார்வதி, செல்வராணி, அண்ணாதுரை, வக்கீல் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல, சேந்தமங்கலம் பேரூராட்சியில் 7, 8, 10 வார்டுகளில் ₹1 கோடி மதிப்பில் தார்சாலை மேம்பாட்டு பணி,

பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ₹17 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டும் பணி ஆகியவற்றை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பேளுக்குறிச்சியில் நடந்து வரும் பழனியப்பர் கோயில் திருப்பணியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி செயல் அலுவலர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சங்கரகுமார்,  தலைமையாசிரியர் மகாலட்சுமி, நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், பூபதி, சின்னுசாமி, முருகேசன், ரவிச்சந்திரன், மாதேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : women ,self-help groups ,Senthamangalam ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை