×

புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம், மார்ச் 7:  நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. தற்போது வறட்சி நிலவி வருவதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடுகள் வரத்து அதிகரித்திருந்தது. கடந்த வாரம் ₹4,200க்கு விற்கப்பட்ட 10 கிலோ எடையுள்ள ஆடு இந்த வாரம் 4,500க்கும்,  3400க்கு விற்கப்பட்ட மற்ற ஆடுகள் இந்த வாரம் ₹3,700க்கும் விலை போனது. இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்ததால், சந்தையில் கூட்டம் அலைமோதியது. மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடு ஒன்றுக்கு ₹300 முதல் ₹500 வரை அதிகம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Budhana ,
× RELATED புதன்சந்தையில் ஆடுகள் விலை உயர்வு