×

நாளை மகளிருக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை, மார்ச் 7: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை(மார்ச் 8) மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்ததாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் “வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மகளிருக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.

இதில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள், டெய்லரிங் முடித்த மற்றும் முடிக்காத 18 வயது முதல் 35 வயது வரையுள்ள பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சியின் போது உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : job camp ,women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...