×

சாலை போடும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

உடுமலை, மார்ச் 7: உடுமலை ஆனைமலை ரோடு கே.ரெட்டிபாளையத்தில் சாலை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஏற்கனவே இருந்த சாலையை பெயர்த்து, ஜல்லிகள் குவிக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இந்த பணி நடக்கிறது. ஆனால் பல வாரங்கள் ஆகியும் சாலை போடப்படவில்லை. சுமார் ஒன்றரை கி.மீ., தூரத்துக்கு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ஜல்லிகற்கள் மீது முதல்கட்டமாக மண்ணையாவது பரப்பி இருக்கலாம். தினசரி ஏராளமானோர் உடுமலை மற்றும் பொள்ளாச்சிக்கு இந்த வழியாக செல்கின்றனர். இரு சக்கர வாகனங்கள் பஞ்சராகிறது. நடந்து சென்றால் கால்களில் காயம் ஏற்படுகிறது. அவசரத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூட செல்ல முடியவில்லை. எனவே, உடனடியாக சாலையை பணியை முடிக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...