×

கோபி அருகே மான் வேட்டையாடியவர் கைது

கோபி, மார்ச் 7:  கோபி அருகே வனப்பகுதியில் மான் வேட்டையாடியவரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். கோபி அருகே டி.என்.பாளையம் வனசரகத்திற்குட்பட்ட மாக்கம்பாளையம், கூத்தம்பாளையம் பிரிவு பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து, சோதனை நடத்தியதில் மான் தோல், கத்தி, சுருக்கு கம்பி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மாக்கம்பாளையத்தை சேர்ந்த வெள்ளையன்(47) என தெரியவந்தது. கடந்த சிலநாட்களுக்கு முன் வெள்ளையன், கூத்தம்பாளையம் வன பகுதியில் சுருக்கு கம்பி மூலம் புள்ளிமானை பிடித்து கொன்று தோலை பதப்படுத்தியதும், அந்த தோலை எடுத்துச் செல்லும் போது பிடிபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Tags : Gopi ,
× RELATED 2014ல் மோடி கொடுத்த கேரண்டி என்னாச்சு: சொன்னாரே..! செஞ்சாரா..? முத்தரசன் கேள்வி