×

புரோக்கர் பாஸ்போர்ட் தர தாமதம் விமானம் சென்றதால் 18 பயணிகள் தவிப்பு

திருச்சி, மார்ச் 7: திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு ஏர் ஏசியா விமானம் நேற்றிரவு 10 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது பயணிகளின் ஆவணங்கள் ஒரு மணி நேரத்திறகு முன் சோதனை செய்யப்பபட்டது. ஆனால் 18 பேரின் பாஸ்போர்ட் புரோக்கரிடம் சிக்கியது. இதனால் ஆத்திரமடைந்த 18 பேரும் மற்றொரு புரோக்கரான முனியசாமியை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த புரோக்கர்கள் முனியசாமி, சரவணன். இருவரும் புருனேவிற்கு வேலைக்காக 18 பேரை தேர்வு செய்து அனுப்ப தயாராகினர். இதில், விசா டிக்கெட் தயாராக இருந்த நிலையில் 18 பேரையும் அழைத்து கொண்டு முனியசாமி முன்னதாக திருச்சி வந்தார். சரவணன் 18 பேரின் பாஸ்போர்ட்டை எடுத்து வர காலதாமதமானதால் விமானம் புறப்பட்டு சென்றது என்றனர்.

Tags : passengers ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!