×

திருச்சியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 7 :  பாராளுமன்ற தேர்தலையொட்டி தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வரும் பாராளுமன்ற தேர்தலை காரணம் காட்டி திருச்சி மாவட்டத்தில் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்தும் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து மீண்டும் அதே இடத்ததில் பணியாற்ற உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வளனரசு கோரிக்கை குறித்து பேசினார். 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Government employees ,Trichy ,
× RELATED ஓய்வு அரசு ஊழியர் சங்க கூட்டம்