×

நீடாமங்கலம் கொத்தமங்கலம் சாலையில் பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் பொது சுகாதார வளாகம் மக்கள் தவிப்பு

நீடாமங்கலம்,மார்ச் 7: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் ஐயுடிஎம் திட்டத்தில் கடந்த 2011-12ம் ஆண்டு ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்  புதிய தாலுகா அலுவலகம் வழியாக கொத்தமங்கலம் செல்லும் வழியில் பொது சுகாதார கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் என தனித்தனியே குளியலறை,கழிவறை வசதி கொண்டது.இந்தப்பகுதியில் மண்டபத்தெரு,கொத்தமங்கலம் மேட்டுத்தெரு உள்ளிட்ட அப்பகுதியில் தனி நபர் கழிவறை இல்லாதவர்கள் இந்த கழிவறையை பயன்படுத்தி வந்தனர்.இந்த கழிவறையின்  மோட்டார் சில நேரங்களில் ரிப்பேராகி விடுமாம்.தற்போது  அந்த கழிவறையில் வெளி நபர்கள் வந்து மது அருந்தி விட்டு செல்கின்றனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. எனவே தற்போது கோடை காலம் என்பதால் அப்பகுதி மக்கள் நலன்கருதி சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொது சுகாதார கட்டிடத்தை திறந்து  செயல்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : campus ,kothamangalam road ,
× RELATED கிம்ஸ் ஹெல்த் இலவச இதய மருத்துவ முகாம்...