×

பொன்னமராவதியில் சாலை பணி பாதியில் நிறுத்தம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பொன்னமராவதி, மார்ச் 7: பொன்னமராவதியில் உள்ள வலையபட்டிக்கு செல்லும் குண்டும் குழியுமான சாலையினை புதிதாக போடுவதற்காக தோண்டப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் சாலைப்பணிகள் நடைபெறாததால் பொதுமக்கள் இந்த சாலையில் சிரமத்துடன் சென்று வரும் நிலையினை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி-புதுக்கோட்டை சாலையில் பொன்.புதுப்பட்டி நால்ரோட்டில் இருந்து வலையபட்டிக்கு ஒரு தார் சாலை செல்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு செல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்த சாலையினை சீர் செய்ய கோரி தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த சாலை சீரமைக்கப்பட்டு புதிதாக போடுவதாக கூறி கொஞ்ச தூர் சாலையில் ஜல்லிகள் தோண்டப்பட்டு கிடக்கின்றது. நீண்ட நாட்கள் ஆகியும் இந்த சாலைப்பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதால் இந்த சாலை வழியாகச் செல்லும் பொதுமக்கள் வாகனங்களில் செல்லமுடியாத நிலையுள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி தோண்டப்பட்ட சாலையினை சீர்செய்து புதிதாக தார்சாலை போட்டு போக்குவரத்துக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorists ,Ponnaravarai ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...