×

புதுக்கோட்டையில் 2 வது நாளாக வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, மார்ச்7: புதுக்கோட்டையில் 2வது நாளாக வருவாய்த்துறை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 47 தாசில்தார்கள், 29 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் திருச்சி, சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு உடனே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் புதுக் கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  பணிமாறுதல் செய்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Pudukottai ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...