×

கறம்பக்குடி அருகே தரமற்ற சாலை பணியை தடுத்து பொதுமக்கள் திடீர் போராட்டம்

கறம்பக்குடி, மார்ச் 7: கறம்பக்குடி அருக் தரமற்ற சாலை பணியை தடுத்து பொதுமக்கள் திடீரென போராட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, மேல மஞ்சுவிடுதி , சவேரியார்பட்டினம், மேல சவேரியார்பட்டினம் , புலையன் தெரு போன்ற ஏராளமான தெருக்கள் அமைந்துள்ளன. கறம்பக்குடி திருமணஞ்சேரி அருகே அமைந்துள்ள பட்டத்திகாடு, கரு தெற்கு தெரு , கரு கீழத்தெரு மற்றும் அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று கடந்த கர்க்காக்குறிச்சி சாலை 12 கி.மீ அளவிற்கு தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை தரமற்ற பொருட்களை கொண்டு அமைக்கப்படுவதாக கூறி மஞ்சுவிடுதி, சவேரியார்பட்டினம் , மேல சவேரியார் பட்டினம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை பணியை தடுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து கறம்பக்குடி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இனிமேல் சாலை பணிகள் ஒன்றிய அலுவலர்கள் மேற்பார்வையில் முன்னிலையில் தரமுள்ள சாலை பணிகள் செயல்படுத்தப்படும் என்று கூறியதை அடுத்து போராட்ட முடிவை கைவிட்டனர்.

Tags : strike ,civilians ,road ,Karampukudi ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து