×

எஸ்பியிடம் புகார் எங்களை மட்டும் ஏன் ஒதுக்குறீங்க... அடிப்படை வசதிகள் கோரி அனுமந்தநகர் மக்கள் புலம்பல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தநகர் முதல்தெருவில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் அனுமந்தன்நகர் நகர் முதல் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள் கால்வாயில் செல்ல வழியின்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் பல்கி பெருகி பொதுமக்களின் இரவு தூக்கத்தை கெடுப்பதுடன் பல்வேறு நோய்களையும் பரப்பி வருகிறது. அனுமந்தநகர் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி எல்லைக்குட்பட்டதாகும். ஆனால் இப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களை அனுப்புவதே இல்லை. இதனால் குப்பைகளும், கழிவுநீரும் கால்வாயில் தேங்கியே நிற்கிறது.

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அனுமந்தநகரை மாற்றாந்தாய் பிள்ளையாக ஊராட்சி நிர்வாகம் நினைக்கிறது. கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய பலமுறை நாங்கள் கூறியும் கண்டுகொள்ளவில்லை. அடிப்படை வசதிகளின்றி பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றாவிட்டால் மக்களை திரட்டி  சாலைமறியலில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Tags : SPP ,
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்