×

முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு கல்வி உதவிதொகை விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர்,மார்ச்7: முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையினைப்பெற விண்ணப்பிக்கலாம் என  பெரம்பலூர் கலெக்டர் சாந்தா  தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:2018-2019ம் ஆண்டுக்கு இதுவரை கல்வி உதவித்தொகை பெறாத முன்னாள் படை வீரர்களின் சிறார்கள் பள்ளிக்கல்வி, இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட் பக்கல்வி, தொழிற்கல்வி, தொழில்சார்ந்தகல்வி மற்றும் பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் அனைத்திற்கும் கல்விஉதவித்தொகை பெறுவதற்கு வரும்;15ம்தேதிக்குள் அரியலூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவிஇயக்குநர் அலுவலகத்தில் விண் ணப்பம் பெற்று பூர்த்திசெய்து கல்வி உதவித்தொகையினைப் பெற விண்ணப்பிக்க லாம். மேலும் விவரங்கள்அறிய, அரியலூர்மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரை  தொடர்புகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Ex-servicemen ,successors ,
× RELATED இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8...