×

மேட்டுபாளையத்தில் நாளை சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

பெரம்பலூர், மார்ச் 7: மேட்டுபாளையத்தில் நாளை சிறப்பு குறைதீர்க்கும முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசால் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டை பெற பதிவு செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வாரிசுரிமை சான்றிதழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்ைக மனுக்கள், ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல் ஆகியவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி நாளை (8ம் தேதி) வேப்பந்தட்டை தாலுகாவில் மேட்டுப்பாளையம் (வடக்கு), குன்னம் தாலுகாவில் ஒதியம், ஆலத்தூர் தாலுகாவில் கூடலூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : camping camp ,Mettupalayam ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்