×

காரைக்கால் என்ஐடியில் தொழில்நுட்ப விழா நிறைவு

காரைக்கால், மார்ச் 7:  காரைக்கால் என்ஐடியில் நடைபெற்று வந்த 3 நாள் தொழில்நுட்ப விழா நிறைவு பெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் இயங்கிவரும் என்.ஐ.டியில், 3 நாள் தொழில் நுட்ப விழா நிறைவடைந்தது. 3 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் பல்துறை தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள், போட்டிகள் மற்றும் தொழில் நுட்பம் சாரா பல போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள்  சுமார் 40 பேர் கலந்து கொண்டு தங்களின் திறமையினை வெளிப்படுத்தினர்.

மேலும்  புதுச்சேரி, காரைக்கால், தமிழ்நாடு, ஆந்திர, கேரளா, கர்நாடக  உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பல்வேறு துறையின் பல்வேறு தலைப்புகளில்  ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.நிறைவு நாளில் சிறப்பு விருந்தினராக ஓ,என்.ஜி.சி பொதுமேலாளர் தங்கராஜ் , மாவட்ட எஸ்பி வீரவல்லவன் ஆகியோர் கலந்து கொண்டு  தொழிற்நுட்ப ஆய்வு கட்டுரைகள் மற்றும் பல்வேறு கருத்தரங்கில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Tags : Karaikal NIT ,
× RELATED கொரோனா எதிரொலி காரைக்கால் என்.ஐ.டிக்கு மார்ச் 31 வரை விடுமுறை