×

நாகை வெளிப்பாளையத்தில் இன்சூரன்ஸ் தொகை வழங்குவதில் இழுத்தடிப்பு கூட்டுறவு கடன் சங்கம் வருத்தம்

நாகை, மார்ச் 7:நாகை  வெளிப்பாளையத்தில் இன்சூரன்ஸ் தொகை வழங்குவதில் இழுத்தடிப்பதால் கூட்டுறவு கடன் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. நாகை வெளிப்பாளையம் பப்ளிக்ஆபீஸ் சாலையில்  இயங்கி வரும் நாகை அரசாங்கப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் பூட்டை கடந்த 25.1.2016ம் ஆண்டு இரவு உடைக்கப்பட்டு அறையின் பீரோ லாக்கரில் இருந்த  ரூ. 1,74,700 திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அப்போது  காவல் துறை  சார்பில் நீதி மன்றத்தில் 12.1.2017 அன்று கண்டுபிடிக்க இயலாத வழக்கு என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டிய இன்சூரன்ஸ் தொகையை கடந்த ஒன்றையாண்டுளாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இதையடுத்து கூட்டுறவு சங்கம் சார்பில்  நீயூ இந்தியா அஷ்யூரன்ஸ்  கம்பெனிக்கு தொடர்ந்து கடிதம் எழுதப்பட்டு வருகிறது. ஆனால் இன்சூரன்ஸ் கம்பெனி கண்டுகொள்ளாததை கூட்டுறவு சங்கம் வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது.

Tags : Co-operative Credit Association ,
× RELATED கூட்டுறவு கடன் சங்கம் மலையாளத்தில் வழங்கிய நோட்டீஸ்