×

தாசில்தார் அலுவலகம் முற்றுகை

விருத்தாசலம், மார்ச் 7: விருத்தாசலம் அடுத்த ஆலடி, மணக்கொல்லை, இருளக்குறிச்சி மற்றும் முடப்பள்ளி பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப்பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை கடந்த 4 வருடங்களாக வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வருவாய் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவைகள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், வட்டக்குழு சீனிவாசன் ஆகியோர் தலைமையில் விருத்தாசலம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாசில்தார் கவியரசு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தப்பின் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Siege ,Tashildar ,
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...