தூத்துக்குடி, மார்ச் 7: தூத்துக்குடி மகளிர் போலீசார் சுப்பையாபுரம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் திடீா் சோதனை நடத்தினர். அப்போது அங்கு குமரி மாவட்டம், புதுக்கடையை சேர்ந்த ஒரு திருமணமான இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக 3 சென்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் தனசிங் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான சுரேஷ் தனசிங் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.