×

குரும்பூர் பகுதியில் ரேஷன் கடை, பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பங்கேற்பு

திருச்செந்தூர், மார்ச் 7: குரும்பூர் பகுதியில் பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் மற்றும் ரேஷன் கடைக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அனிதாராதா கிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டார்.
 குரும்பூர் அருகே உள்ள கீழகல்லாம்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்ட ரூ.10 லட்சமும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.13 லட்சமும், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.13.5 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டிடங்களுக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். இதில் மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், தென்திருப்பேரை நகர செயலாளர் ராமஜெயம், திமுக மாவட்ட பிரதி நிதி ஆறுமுகநயினார், மாவட்ட விவசாய அணி பெருமாள், ராஜர த்தினம், ஊர் பிரமுகர்கள் கர்ணன், மாரிமுத்து, ஊர் தலைவர் மாரியப்பன், புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நிறுவனர் நாசர், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்நியூமன், துணை தலைமையாசிரியர் பெல்சியா ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags : shop ,school building foundation ceremony ,Anita Radhakrishnan MLA ,
× RELATED படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி...