சாத்தான்குளம், மார்ச் 7: சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் ஐஓபி கிளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நாளை (8ம் தேதி) நடக்கிறது.
மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண்மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி டாக்டர் மோகன் நீரழிவு மையம் இணைந்து இலவச சர்க்கரை நோய் மற்றும் கண்பரிசோதனை முகாம் நாளை (8ம் தேதி) நடக்கிறது. சாத்தான்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை நடைபெறும் இம்முகாமில் அனைவருக்கும் இலவசமாக கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஏற்கனவே கண்ணாடி அணிந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்து கொள்ளலாம். இத்தகவலை சாத்தான்குளம் ஐஓபி வங்கி முதுநிலை மேலாளர் சேகர் தெரிவித்துள்ளார்.