×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு மினிவேன் டிரைவர் வீட்டுக்கு தீ வைப்பு

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 6: திருவெண்ணெய்நல்லூர் அருகே காதல் திருமணத்தால் ஏற்பட்ட பதற்றம் தணிந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மினிவேன் டிரைவர் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி நேரில் விசாரணை நடத்தினார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் இரு சமூகத்தை சேர்ந்த ஆணும், பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவத்தால் இரு சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். இதில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. வீட்டின் முன் நிறுத்தி இருந்த மினி வேன், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தரப்பை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் காதல் ஜோடி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதல் திருமணம் செய்த பெண் கணவருடன் செல்வதாக கூறியதின்பேரில் கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சுந்தரமூர்த்தி என்பவரின் aகூரை வீட்டுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்துள்ளனர். சுந்தரமூர்த்தி சொந்தமாக மினிவேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர் பெங்களூரு சென்று விட்டநிலையில், இவரது மனைவி சாந்தி (42), மகன் சுரேஷ் (24) ஆகியோர் மட்டும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

வீட்டிற்குள் திடீரென புகை பரவியதால் விழித்துக் கொண்ட தாயும், மகனும் வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வெளியில் ஓடிவந்து உயிர் தப்பினர். பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ெபாருட்கள் எரிந்து நாசமானது. மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் ஆனத்தூர் பகுதியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : house ,Firewood Minivan Driver ,Thiruvannai Nellore ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்