×

ஆட்டையாம்பட்டி காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

ஆட்டையாம்பட்டி, மார்ச் 6:  ஆட்டையாம்பட்டி சேலம் ரோட்டில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை மாரியம்மன் கோயில் பூசாரி ராஜேந்திரன் தலைமையில் பக்தர்கள் தீ சட்டி ஊர்வலமும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்கினர். இதனையடுத்து, பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழியினை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Pongal Festival ,Attiyampatti Kaliamman Temple ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா