×

திருச்சியில் 4ம் வகுப்பு மாணவி கடத்தல்? தாய் அழைத்து சென்றது தெரியவர போலீஸ் நிம்மதி

திருச்சி, மார்ச் 6: திருச்சி உய்யகொண்டான் பகுதியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் வயலூர் மெயின்ே–்ராடு ராமலிங்க நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து 4ம் வகுப்பில் மாணவி படித்து வருகிறார். இவரின் பெற்றோர் சென்னையில் உள்ளனர். திருச்சியில் உள்ள அத்தை வீட்டில் மாணவி தங்கி படித்து வந்தார். மாணவி தினமும் பள்ளிக்கு வேன் மூலம் சென்று வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வெகு நேரமாக மாணவி வீட்டுக்கு வராததால் பதறி அடித்துக்கொண்டு உறவினர்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கு விசாரித்தபோது, மாணவியின் தாய் என கூறி ஒருவர் வந்து அழைத்து சென்றதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். இதனால் பதறிய உறவினர்கள், மாணவியை மர்ம பெண் ஒருவர் கடத்தி சென்றதாக பீதி ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து உறவினர்கள் உறையூர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மாணவியின் பெற்றோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் மாணவியின் தாய், நேற்று பள்ளி வந்து மகளை அழைத்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவத்தினால் திருச்சியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மாணவி விஷம் குடித்து சாவு: லால்குடியை அடுத்த டி.வளனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரவேல் மகள் பிரித்தி(20). இவர் லால்குடி அருகே உள்ள குமுளுர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி பிரித்தி விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரித்தி நேற்று இறந்தார்.  லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லால்குடி பஸ் ஸ்டாண் டில் மூதாட்டி சடலம் மீட்பு: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் நேற்று அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் லால்குடி போலீசார் சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பெண்ணுக்கு 65 வயது இருக்கும். பச்சை கலரில் புடவை அணிந்திருந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்தது விசாரணையில் தெரிந்தது. இறந்துபோன மூதாட்டி யார்? எப்பறி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student kidnapping ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...