×

சூளகிரி அருகே பெண்ணிடம் சில்மிஷம் கார் மெக்கானிக் கைது

சூளகிரி, மார்ச் 6: சூளகிரி அருகே, குடி போதையில் பெண்ணின் கையை பிடித்து இழுத்த கார் மெக்கானிக்கை போலீசார் கைது செய்துள்ளனர். சூளகிரி அடு த்த காமன்தொட்டி டோரிப்பள்ளியை சேர்ந்த குப்பா ராம் மனைவி  சசிகலா(30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை  காமன்தொட்டியை சேர்ந்த சுப்ரமணி மகன் சரவணன்(27) என்பவர் குடி  போதையில், டோரிப்பள்ளியில் சாலையில் நடந்து சென்ற சசிகலாவை கையை பிடித்து இழுத்துள்ளார். அவரிடம்  இருந்து தப்பிவந்த சசிகலா, இதுகுறித்து அவரது மாமா பாலசந்தரிடம் தெரிவித்துள்ளார். அவர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார்  தெரிவித்தார். இதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், கார்  மெக்கானிக் சரவணனை கைது செய்து விசாரித்தனர். அதில், ஓசூரில் உள்ள  பட்டறையில் கார் மெக்கானிக்காக பணியாற்றி வந்த சரவணனுக்கு, கடந்த சில  மாதத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனதாகவும், திடீரென மனைவி இறந்ததால் மதுவுக்கு  அடிமையான சரவணன் தினமும் குடித்து விட்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

Tags : Sulagiri ,Silkisham Car Mechanic ,
× RELATED சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்...