×

தென்னிந்திய அளவிலான தரை வளைபந்து போட்டியில் தமிழக அணி வெற்றி

தர்மபுரி, மார்ச் 6: தர்மபுரியில் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, தரை வளைபந்து போட்டி, கடந்த 1ம் தேதி தொடங்கியது.  இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநில அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் நடந்த இப்போட்டியில் ஆண்கள் பிரிவில், தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் பங்கேற்றது. இதில், தமிழக அணி, 3-1 என்ற கோல் கணக்கில், கர்நாடகாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது. பெண்கள் அணியில், 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகளுக்கும், இரண்டாமிடம் பிடித்தவர்களுக்கும், முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரர் அஸ்வின், பதக்கம் மற்றும் மெடல் வழங்கி பாராட்டினார். இதில், தமிழக வளைபந்து பயிற்சியாளர் மகத்நம்பியார், தமிழக வளைபந்து சங்க செயலாளர் விஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamilnadu ,team win ,South Indian ,
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...