×

கொடைக்கானல் ஏரியில் ரூ.50 லட்சத்தில் மேம்பாட்டு பணிகள்

கொடைக்கானல், மார்ச் 6: கொடைக்கானல் ஏரியில் ரூ.50 லட்சம் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  கொடைக்கானல் ஏரியை சுற்றி நடைபாதைகள், கழிப்பறைகள், ஏரியை சுற்றியுள்ள சேதமடைந்த தடுப்பு வேலிகள் சீரமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை கொடைக்கானலில் உள்ள தனியார் நிறுவனமான கால்டன் ஓட்டல் நிர்வாகம் செய்வதற்கு கொடைக்கானல் நகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. முதல் கட்டமாக கொடைக்கானல் ஏரி மேம்பாட்டு பணிகள் ரூ.50 லட்சம் செலவில் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் துவங்கும். ஏரியை சுற்றி தூய்மை பணிகளும் நடைபெறும் என்று கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் முருகேசன் தெரிவித்தார்.

Tags : Kodikanal Lake ,
× RELATED பழநி அ.கலையம்புத்தூரில் உலக நலன் வேண்டி ருத்ர ஹோமம்