முத்துப்பேட்டை ,மார்ச்6: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் மனோகரன்(38). டிரைவர். இவர் நேற்று முத்துப்பேட்டைக்கு வந்து விட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த ராமநாதபுரம் அடுத்த பாண்டியூர் வடக்கு தெருவை சேர்ந்த கல்யாணி குமார் மகன் மணிகண்டன்(25) கத்தியை காட்டி பைக்கை மறித்தார்.
மேலும் பைக்கிலிருந்த மனோகரனிடம் சட்டை பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டார்.இதுகுறித்து மனோகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்துறைப்பூண்டி சிறையில் அடைத்தனர்.