×

அனுமதியின்றி மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது

ஜெயங்கொண்டம், மார்ச் 6: ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லியில் அனுமதியின்றி விற்பனைக்கு மது வைத்திருந்தவரை உடையார்பாளையம் போலீசார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள சுத்தமல்லி பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்கப்படுவதாக உடையார்பாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி உடையார்பாளையம் எஸ்ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் திடீரென சுத்தமல்லி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சுத்தமல்லி குட்டை ஏரி அருகே மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் சுத்தமல்லி பெருமாள்கோயில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் முருகபாண்டியன்(43)என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : detainee ,
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...