×

கோவை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி டெல்லி திரும்பினார்

கோவை, மார்ச் 6: கோவையில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தனி விமானத்தில் டெல்லி திரும்பினார். சூலூர் விமான படைதளத்துக்கு விருது வழங்கும் விழா மற்றும் ஈஷா யோகா மைய விழாவில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை வந்தார். நேற்று முன்தினம் தனது நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட ஜனாதிபதி கோவை ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் நேற்று காலை  கோவை விமானநிலையம் சென்ற ஜனாதிபதி 10.13 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு  சென்றார்.

இதே போல ஜனாதிபதி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை 10.57 மணி விமானத்தில் சென்னை கிளம்பினார்.
ஜனாதிபதி மற்றும் கவர்னரை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித் சரண், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

Tags : Rajapaksa ,Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்