×

அரக்கோணம் அருகே துணிகரம் 2 டாஸ்மாக் கடைகளை உடைத்து ₹1.50 லட்சம், மதுபானம் திருட்டு

அரக்கோணம், மார்ச் 6: அரக்கோணம் அருகே 2 டாஸ்மாக் கடைகளை உடைத்து ₹1.50 லட்சம் பணம், மதுபானத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டையில் வெவ்வேறு தெருவில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு கடையில் ரத்தினகிரியை சேர்ந்த பாஸ்கரன் மேற்பார்வையாளராகவும், செம்பேடு கிராமத்தை சேர்ந்த ரமேஷ், கைனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் விற்பனையாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். அதேபோல், மற்றொரு கடையில் திருப்பத்தூரை சேர்ந்த விஜயராகவன் என்பவர் மேற்பார்வையாளராகவும், பெருவளையத்தை சேர்ந்த சவுந்தர், சோளிங்கரை சேர்ந்த தனசேகர் ஆகியோர் விற்பனையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் 2 கடையிலும் மது விற்பனையை முடித்துக்கொண்டு கடைகளை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். நேற்று அதிகாலை அரக்கோணம் டவுன் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் கும்பினிபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது மேற்கண்ட 2 டாஸ்மாக் கடைகளிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து சோதனை செய்தபோது கடையில் திருட்டு நடந்தது தெரியவந்தது. தகவலறிந்து அரக்கோணம் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் வந்து கடைக்குள் பார்த்தனர். அப்போது ஒரு கடையில் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ₹1.39 லட்சம், மற்றொரு கடையில் ₹17 ஆயிரம் மற்றும் 2 கடைகளிலும் மதுபானங்கள் திருட்டு போனது தெரியவந்தது. தகவலறிந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடைகளில் திருடிய மர்ம ஆசாமிகளை ேதடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.க்கப்பட்ட லாக்கர்.

Tags : Breach ,shops ,Tossack ,Arakkonam 2 ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி