×

பண்ணாரி அம்மன் கல்லூரி ஆண்டு விழா அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா பங்கேற்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் 23ம் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவிற்கு பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கல்வி, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை தலைவர் தங்கராஜ் வரவேற்றார். கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் பழனிச்சாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா பேசுகையில், `பொறியியல் கல்வியில் மாற்றம் பெற திறன்மேம்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். மாணவர்களின் தரம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் சமுதாயத்தின் பல சவால்களுக்கு தீர்வாக அமையும். தொழில்நுட்பப்பிரிவுகளில் மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்று தொழில்முனைவோராகவும், சிறந்த பொறியாளராகவும் மாற வேண்டும்’ என்றார். இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் சிறந்த மாணவிக்கான விருதை மின்னியல் துறை மாணவி தேவதர்ஷினிக்கும், சிறந்த மாணவருக்கான விருதை  மின் அறிவியல் துறை மாணவர் அரவிந்த் சலபதி, கட்டிடவியல் துறை மாணவர் அஸ்வின் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

Tags : Anna University ,Vice Chancellor ,Bannari Amman College ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...