நாகை, மார்ச் 6: நாகை அந்தநல்லூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. நாகை எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் போரில் திட்டச்சேரியை அடுத்த அனந்தநல்லூர் அருகே போலீஸ்சார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தபோது டிராக்டரில் முடிகொண்டான் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ப.கொந்தை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த வீரமுத்து மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவரை கைது செய்தனர்.