×

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது

வேளச்சேரி, மார்ச் 6: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். சென்னை நங்கநல்லூர் எம்ஜிஆர் நகரை  சேர்ந்தவர் சத்யா  (40). இவரது மகன் தனுஷ் (எ) தனசேகரன்  (19). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தபோது, அதே பள்ளியில் படித்த, உறவினர் மகளான 13 வயது சிறுமியை காதலித்துள்ளார். பின்னர், இருவரும் பள்ளியில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி திடீரென மாயமானார். உடனே சிறுமியின் பெற்றோர், சாஸ்திரி நகர் போலீசில், புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது நங்கநல்லூரில் உள்ள தனுஷ் வீட்டில் சிறுமி இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், தனுஷின் தாய் சத்யா (40), அவரது 2வது கணவர் அன்பு (எ) அன்பழகன் (40) ஆகியோர், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனுஷுடன் திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச்சென்று, கடந்த 4 நாட்களாக  தனுஷுடன் குடும்பம் நடத்த வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் சத்யா, 2வது கணவர் அன்பு ஆகியோரை கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags : kid ,
× RELATED பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது