கரூர், மார்ச் 6: கரூர் பசுபதீசுவரா பெண்கள் பள்ளியில் சேதம் அடைந்த பள்ளி மேடையை சீரமைக்க எதிர்பார்க்கின்றனர். கரூர் பசுபதீசுவரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழா மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு, ஆண்டு விழா, அரசு நலத்திட்ட விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த மேடையில் நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் மேடையின் தரைத்தளம் மற்றும் சுவர் சேதம் அடைந்து காணப்படுகிறது. சுவரில் விரிசல் விட்டு காணப்படுகிறது.
இதனால் நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். விழா மேடையை சீரமைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.