×

கரூர் சுங்ககேட் பகுதியில் தூர் வாராமல் புதர் மண்டி காணப்படும் கழிவுநீர் ஓடை

கரூர், மார்ச் 6: கரூர் சுங்ககேட் பகுதியில் தூர் வாராமல் புதர் மண்டிய கழிவுநீர் ஓடையை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் சுங்ககேட் பகுதியில் கழிவுநீர் ஓடை உள்ளது. இதனை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. சுங்ககேட் மெயின் ரோட்டை கடந்து அமராவதி ஆற்றுப்பகுதிக்கு இந்த ஓடை செல்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கழிவுநீர் ஓடையில் தேங்கி கிடக்கிறது. இதனை தூர்வாரி நீண்ட காலமாகி
விட்டது.

செடிகள் வளர்ந்து மண்மேடாக இருப்பதால் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி கூடமாக இருக்கிறது. லட்சணக்கணக்கில் செலவு செய்து இடம் வாங்கி வீடு கட்டியவர்கள் இப்போது சுகாதார கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். சுகாதார கேட்டை தடுக்க கழிவுநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : stream ,area ,Karur Sungaghat ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...