×

கரூரில் எலுமிச்சம் பழம் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ.100க்கு விற்பனை

கரூர், மார்ச் 6: கரூரில் எலுமிச்சம்பழம் விலை கிடுகிடு என உயர்ந்தது. கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே வெயில் உச்சத்தில் உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க எலுமிச்சை சாறு, எலுமிச்சை சோடா என அதிக அளவில் அருந்துகின்றனர். உழவர் சந்தைகளில் எலுமிச்சம் பழம் கடந்த மாதம் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து வருகிறது.  

உழவர் சந்தைகளில் நேற்று கிலோ ரூ.70 ஆக இருந்தது. கடைகளில் பெரிய பழம் ரூ.100 வரை விற்பனை செய்கின்றனர். கோடை காலம் நெருங்க மேலும் விலை அதிகரிக்கலாம். இந்த ஆண்டு எலுமிச்சை பழம் உற்பத்திக்குறைவு காரணமாக விலை அதிகரித்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Karur ,
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்