நாமக்கல், மார்ச் 1: நாமக்கல் வாக்கர்ஸ் கிளப்பின் 25ம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பில்டர்ஸ் மஹாலில் நடந்தது. இதில் 2019-20ம் ஆண்டிற்கான புதிய தலைவராக எஸ்.எல்.எஸ் டிரான்ஸ்போர்ட் சுந்தர்ராஜன், செயலாளராக ஏழுமலையான் டயர்ஸ் ஜேசி ராஜூ, பொருளாளராக ஜோதி பஸ் சர்வீஸ் ஜோதி குப்புசாமி, உதவித் தலைவர்களாக ஆர்.எஸ்.ஆர் காம்பளக்ஸ் சுந்தர்ராஜூ, நம்மாழ்வார் பள்ளி தலைவர் ஆசிரியர் ஜெயச்சந்திரன், இணை செயலாளராக ஆஞ்சநேயா பைனான்ஸ் உமாசங்கர் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். விழாவில், சிறப்பு விருந்தினராக நாமக்கல் எஸ்பி அருளரசு கலந்து கொண்டு பேசினார். இதை தொடர்ந்து கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்ட மருத்துவர் மதன்குமார், சித்த மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் பேசினர். நாமக்கல் தெற்கு பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்க¬ளுக்கு கல்வி உதவித் தொகையாக ₹5000 வழங்கப்பட்டது. இதே போல், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.