×

திருமலைகிரியில் 144 தடை உத்தரவு வாபஸ்; இன்று கோயில்கள் திறப்பு

சேலம், மார்ச் 1:சேலம் திருமலைகிரி தோப்புக்காட்டில் உள்ள சைலகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை, கடந்த 2015ம் ஆண்டு நடத்த ஒரு பிரிவினர் ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து சைலகிரீஸ்வரர் கோயில் மற்றும் வேடுகாத்தான்பட்டி வரதராஜபெருமாள் கோயிலுக்கு சீல் வைத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே இரு பிரிவினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், பிரச்னையை குறைத்து, படிப்படியாக ஒவ்ெவாரு கிராமமாக 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது.

இறுதியாக சைலகிரீஸ்வரர் கோயில், வரதராஜபெருமாள் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த வையாபுரி தரப்பினரும், பால்ராஜ், செங்கோடன் தரப்பினரும் தங்களது வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டனர். இதையடுத்து, இரு கோயில்களிலும் கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக நேற்றிரவு, சைலகிரீஸ்வரர் கோயில்  மற்றும் வரதராஜபெருமாள் கோயில் பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவை, முழுமையாக விலக்கி கொள்வதாக ஆர்டிஓ செழியன் அறிவித்தார். மேலும், இன்று (1ம் தேதி), இரு கோயில்களின் கதவுகளும் தாசில்தார் மூலம் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Tags : Tirumaligiri Today ,temples ,opening ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு