×

பூ வியாபாரியை தாக்கிய லாட்ஜ் மேலாளர் கைது

திருச்சி, மார்ச் 1:  திருச்சியில் தனியார் லாட்ஜில் ரூம் வாடகைக்கு கேட்ட தகராறில் பூ வியாபாரியை தாக்கிய லாட்ஜ் மேலாளரை போலீசார் கைது செய்தனர். மண்ணச்சநல்லூர் அழகியமணவாளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36). மத்திய பஸ்நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரின் உறவினர் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து இரவு திருச்சி வந்தார். இவரை தங்க வைப்பதற்காக மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு சுற்றுலா அலுவலகம் எதிரே உள்ள லாட்ஜில் அறை கேட்டார். அறை வாடகை ரூ.2000 ஆகும் என லாட்ஜ் மேலாளர் லால்குடியை சேர்ந்த சந்திரசேகரன் (33) கூறியுள்ளார்.

அதற்கு ரமேஷ் பெரிய ஓட்டல்களில் தான் அதிக வாடகை உங்கள் லாட்ஜில் அறை சிறியதாக உள்ளது அதற்கு இவ்வளவு பெரிய தொகையை கேட்பீர்களா என கேட்டார். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் லாட்ஜ் மேலாளர் சந்திரசேகரன், பூ வியாபாரி ரமேஷை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதனால் உறவினர் முன் அவமானப்பட்டதை அடுத்து ரமேஷ், இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ ரமேஷ் வழக்குபதிந்து லாட்ஜ் மேலாளர் சந்திரசேகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : Lodge manager ,flower shop ,
× RELATED சென்னை பூக்கடை பகுதியில் ரூ.6 லட்சம்...