×

பெண் பூ வியாபாரி தீயில் கருகி பலி

திருச்சி, மார்ச் 1: மண்ணச்சநல்லூர் திருவாங்கப்பட்டியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மனைவி சித்ரா (42). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உறையூர் இந்திரா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி உடலில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சித்ராவிற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி சித்ரா நேற்றுமுன்தினம் இறந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குபதிந்து சித்ரா தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : florist ,
× RELATED பூக்கடை பகுதியில் அடுக்குமாடி...