×

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.10லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, மார்ச் 1:  திருச்சி விமான நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியதலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவைச் சேர்ந்த ஜெயபிரபா என்ற பயணி தனது உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த 446 கிராம் எடை கொண்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 10.35 லட்சம்  என தெரிய வந்தது. தங்கத்தை கடத்தி வந்த பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy Airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...