×

கந்தர்வகோட்டை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி

கந்தர்வகோட்டை, மார்ச் 1: சாலையோர மரத்தில் பைக் மோதியதில் தனியார் நிதிநிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். கந்தர்வகோட்டை அருகே கோமாபுரத்தில் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சுந்தரவேல் மகன் ஜெகதீசன்(26). ஐடிஐ முடித்து விட்டு கந்தர்வகோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கந்தர்வகோட்டையிலிருந்து கோமாபுரம் நோக்கி தனது பைக்கில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் வடுகப்பட்டி அருகே சாலையோர மரத்தில் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீசன் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் ஜெகதீசன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gandharvatte ,
× RELATED திருமயம் அருகே விநோதம்...