×

ஜெயவிளங்கியம்மன் கோயில் மாசி திருவிழா நள்ளிரவில் திரளான பெண்கள் ஊர்வலமாக மதுக்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடன் அரிமளத்தில் கோலாகலம்

திருமயம்,  மார்ச் 1: அரிமளத்தில் நடைபெற்ற மாசி திருவிழாவின் கடைசி நாளில் திரளான பெண்கள் கலந்து கொண்டு  ஊர்வலமாக சென்று மது களைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஜெயவிளங்கியம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இந்நிலையில் மாசி திருவிழா கடந்த 18ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் தோறும் பல்வேறு சமுதாயத்தினாpன் மண்டகபடியொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.  இதனிடையே கடந்த 25ம் தேதி திருவிழாவையொட்டி மது எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் 16 நாட்கள் விரதம் இருந்து கோயில் வீட்டில் வைத்து சில்வர், பித்தளை, மண் பாத்திரங்களில் நெல் மற்றும் தென்னைபாலைகள் உள்ள மது குடங்களை எடுத்து கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு ஊர்வலமாக வந்து அம்மன் கோயிலில் வைத்து விட்டு செல்வார்கள். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 10ம் நாள் திருவிழாவையொட்டி கோவிலில் வைத்த மதுகுடங்களை  பலூன், மலர்கள், கலர் பேப்பர்களால் அலங்காரம் செய்து  ஊர்வலமாக எடுத்து சென்று மது காளைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மது ஊர்வலமானது ஜெயவிளங்கி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு சின்னபொற்குடையான், சந்தைப்பேட்டை,ஏம்பல் சாலை,சிவன் கோயில் சாலை வழியாக மது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடைபெறும்  மது களைப்பு நிகழ்ச்சியின்  போதுமது குடங்களில் இருந்த தென்னம் பாளை, நெல்களை கீழே கொட்டி களைக்கப்பட்டது. பின்னர்  மக்கள் கீழே கொட்டப்பட்ட நெல்லில் ஒரு கை பிடி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றனர். இந்த கைபிடி நெல்லை  வீட்டில் விவசாயத்திற்காக சேமித்து வைக்கபட்டுள்ள விதைநெல்லுடன் கலந்து வைத்து விவசாயம் செய்தால் எதிர்வரும் காலங்களில் விவசாயம் செய்யும் போது அமோக விளைச்சலை தரும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இந்த வழக்கம் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.   விழாவை காண சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து  அம்மனை வழிப்பட்டு சென்றனர்.அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Jai Vilangamyamman ,festivities ,Massi ,
× RELATED திண்டுக்கல்லில் மாசி பெருந்திருவிழா...