×

ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி

தேனி. மார்ச் 1: தேனியில்  ஆட்டோ டிரைவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே பழனிசெட்டிபட்டி சத்யமூர்த்தி தெருவில் குடியிருப்பவர் சடையாண்டி மகன் செல்லப்பாண்டி (37). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. இவர் சில  தினங்களாக மனக்குழப்பத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று மதியம் தேனி நேரு சிலை பின்புறம் ஓட்டல் முன்பாக நின்றிருந்த செல்லப்பாண்டி திடீரென தான் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார் இதில் ரத்தம் சொட்ட மயக்கமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது