×

இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, மார்ச் 1:  ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தை பெருகி வரும் மக்கள்தொகைக்கேற்ப விரிவுபடுத்த வேண்டும். அங்கு ஹோமியோபதி மருத்துவ பிரிவில் உடனே தொடங்க வேண்டும். இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, வர்மம், யோகா மருத்துவ முறைக்கான மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும். சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருத்துவ சிகிச்சையை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொண்டுவர வேண்டும்.

பெருகிவரும் புற்றுநோயை கட்டுப்படுத்த நகர, கிராமப் பகுதிகளில் ஆய்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெட்டியார்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை செயலாளர்கள் நளவேந்தன், வீராங்கன், அஜீஸ்நகர் கிளை செயலாளர் முரளி ஆகியோர் தலைமை தாங்கினர். தொகுதி செயலாளர் அன்பழகன், பொருளாளர் முருகானந்தம், ஏஐடியுசி பஞ்சாலை தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், தொகுதிக்குழு உறுப்பினர் தேவசகாயம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Tags : Indian ,Communist ,
× RELATED திருப்பூரில் பாஜக அராஜகம்: தேர்தல்...