×

எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை

புதுச்சேரி,  மார்ச் 1: புதுவை, பாக்குமுடையான்பேட், வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் விஜி  என்ற ஞானசேகரன் (45), டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (43). இவருக்கு 15  வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சமீபகாலமாக  குடும்பத்தில் வறுமை ஏற்படவே தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் விரக்தியடைந்த  பரமேஸ்வரி வீட்டில் இருந்த எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.  இதையடுத்து அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்த  நிலையில், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு  செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக  இறந்தார். இதுகுறித்து அவரது தம்பி செல்வமணி அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...